வால்பாறையில் கன மழையால் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பள்ளி மாணவர் மாயம்

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதேப் போல வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் இன்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் வழித்தடம் அருகே உள்ள தேயிலைத் தோட்ட செடிகளை மூழ்கடித்தபடியே வெள்ள நீர் செல்கிறது. இதனால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடைவிதித்துள்ளனர்.

மேலும், கன மழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், வால்பாறை கூழாங்கல் ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லபட்டார். அவரை தேடும் முயற்சியில் வால்பாறை வனத்துரையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...