பள்ளி நிர்வாகம் நன்கொடை கேட்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி தர்ணா

கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தினைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் சத்யபிரியா. இவர், அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி வித்யாலயா பள்ளியில் தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.



இந்நிலையில், 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்வதற்காக சக்தி வித்யாலயா பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் கோரியதற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்தால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் தரப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சத்யா பிரியா மற்றும் அவரது தந்தை இளங்கோவன் ஆகியோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து, செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறுகையில், எனது மகள் சத்யபிரியா 5ம் வகுப்பு முதல் சக்தி வித்யாலயா பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது 10ம் வகுப்பில் 449 மதிப்பெண் பெற்று மேற்குறிப்பிட்ட பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 11ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இந்தளவிற்கு பெரிய தொகைக்கு நான் என்ன செய்வேன். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...