மறைந்த பத்திரிகையாளர் அவனாசிலிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பத்திரிகையாளர்கள்

கடந்த 1975 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அவினாசியில் ஐயாசாமி, அம்புஜம் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அவனாசிலிங்கம். இவர், சன் தொலைக்காட்சியில் 20 வருடங்களாக பத்திரிகையாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு உயிரிழந்தார்.



நேர்மையான பத்திரிகையாளராகவும், மக்கள் பிரச்சனைகளை ஊடகத்தின் வாயிலாக தீர்த்து வைத்த சமூக சேவகராகவும் வாழ்ந்து மறைந்த அவனாசிலிங்கத்தின் நினைவேந்தலை அனுசரிக்கும் விதமாக அவர் மறைந்த நாளன்று பத்திரிகையாளர்கள் நினைவேந்தல் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போதும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று அவனாசிலிங்கம் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊடகத்துறை வாயிலாக அவனாசிலிங்கம் செய்த சேவைகள் குறித்து உரையாற்றினர். 

நெகிழ்ச்சியான பத்திரிகையாளராய் மட்டுமின்றி நல்ல மனிதராக வாழ்ந்த அவனாசிலிங்கத்துடன் கழித்த தருணங்களை சக பத்திரிகையாளர்கள் கண்ணீர்மல்க வெளிப்படுத்தினர்.



நிகழ்வின் முடிவில், பத்திரிகையாகர்கள் சார்பில் மலைவாழ் மக்கள், மாணவர்கள் மற்றும் நூலகத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...