தடாகம் சாலையில் அதிகளவில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் தடாகம் அருகே யானைகள் கொண்ட கூட்டம் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று இரவு தடாகம் அருகே 15-க்கும் மேற்பட்ட யானைகள் சாலையில் முகாமிட்டன. இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொது மக்கள் அவதியடைந்தனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறி 15 யானைகள் கொண்ட கூட்டம் தடாகம் பகுதிக்குள் நேற்று மாலை 8 மணி அளவில் நுழைந்தது. தடாகத்தில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்த தொட்டிகளில் அந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்தது.

பின்னர் தடாகம் சாலையின் நடுவே மெதுவாக நடந்து சென்ற யானைகளால், ஆனைகட்டி பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த காட்டு யானைக் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. 

ஒரே நேரந்தில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் தடாகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...