அரசியலுக்கு வந்தால் ரஜினி புஸ்வானம் ஆகிவிடுவார்: சீரியஸாய் கலாய்க்கும் சீமான்

தமிழக அரசியல் கால் உடைந்த நாற்காலியாய் ஆடிக்கொண்டிருக்க, ஜெ.வின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப பலரும் கங்கணம் கட்டியுள்ளனர்.

ஒவ்வொரு பட ரிலீசுக்கும் முன்பாக, 'நான் அரசியலுக்கு வருவேனா என்பதை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்' என்று கூறிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்த முறை ரசிகர்களோடு மீட்டிங், அரசியல் பேச்சு என சூட்டை கிளப்பிவிட்டார்.

இதை சில அரசியல் கட்சிகள் வரவேற்றாலும், பலர் மொழியை அடிப்படையாக கொண்டு ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆரம்பகட்டத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நேரடியாகவே சாடிவந்தார். தொலைக்காட்சி பேட்டிகளிலும், செய்தியாளர் சந்திப்பின் போதும், 'தமிழகத்தில் வாழ்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, ஆள்வதற்கு எங்களுக்குத்தான் உரிமை உண்டு' என்ற கருத்துக்களை பதிவு செய்தார்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாட்டிற்கு காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் தான் தேவை. ரஜினி அரசியலுக்கு வந்தால் தீபாவளிக்கு வெடிக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல புஸ்வானம் ஆகிவிடுவார்.

இத்தனை நாளாய் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறார். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால், 'வச்சி செஞ்சு அனுப்புவோம்' என்று கூறியுள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...