புதிதாய் பிறந்த குழந்தைக்கு அரிய வகை சிக்கல் - ஆபரேஷனில் சரி செய்தது ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை

லட்சுமி, சேர்வை தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரிப்பில் இரண்டு கிலோ எடையில், இரட்டை குழந்தை பிறந்தது. இதில், ஒரு குழந்தைக்கு அரிய வகை சிக்கல் இருப்பது கண்றியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தேவபிரசாத், பாதிக்கப்பட்ட குழந்தைகக்கு இருதய துடிப்பு வரைபடமும், சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, இருதயத்தின் நிலை மோசமாக இருந்தது. ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளம், இடது புறமாக திரும்பி, உடல் முழுவதும் ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தத்தை கொடுத்து வந்தது. இது தான் வழக்கமாக இருக்கும் முறை.



ஆனால், இந்த குழந்தைக்கு ரத்த நாளக்குழாய் ஒன்றுக்கு பதிலாக, இரட்டையாக ஒட்டியிருந்தது. இது மிகவும் அரிதான ஒன்று. இருதய குறையுடன் பிறக்கும் குழந்தைகளிலும் இந்த வகைக்கு 0.5 -1% தான் வாய்ப்பு உள்ளது. பல லட்சத்தில் ஒன்று மட்டுமே இவ்வாறு அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த குழந்தைக்கு இடது ரத்த நாளம் மட்டுமின்றி, வலது புறத்திலிருந்தும் ஒரு ரத்த நாளம் உருவாகி வட்ட வடிவத்தில் இருந்தது. இது, முச்சு குழலுக்கும், இரப்பை குழலுக்கும் இடையே அழுத்திக் கொண்டிருந்தது. இந்த அழுத்தம் காரணமாக குழந்தைக்கு முச்சு திணறலும், உணவுக்குழாயில் உணவு செல்ல வழியின்றியும் தவித்தது. குழந்தையின் எடை குறைந்து வந்தது.

தொடர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவில் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் சதாசிவம், டாக்டர் சுஜித், டாக்டர் ரீனுாஸ் ஆகியோர் டாக்டர் தியாகராஜ முர்த்தியுடன் இணைந்து, அறுவை சிகிச்சை செய்தனர்.

சிறிய குழந்தையாக இருந்ததால் அறுவை சிகிச்சைக்குப்பின்னும் சிக்கல்கள் நீடிக்கும். இந்த கவனிப்பை சிசுவியில் நிபுணர் டாக்டர் சித்தார்த்த புத்தவராஜூ மற்றும் டாக்டர் சுஜா மரியம் ஆகியோர் சரியான முறையில் மேற்கொண்டனர். ஒரு வாரத்தில் இவர்கள் நலமுடன் வீடு திரும்பினர்.

தற்போது, நலமடைந்த குழந்தையின் எடை அதிகரிக்க துவங்கியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...