கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இருபதாவது வார களப்பணி குறித்து கலந்தாய்வு கூட்டம்


கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இருபதாவது வார களப்பணியில் கலந்து கொண்ட தன்னலமற்ற தன்னார்வலர்களின் சேவையை சிறப்பிக்கும் பொருட்டு இதுவரை நடைபெற்ற களப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சுந்தராபுரம் ஆனந்தாஸ் உணவகத்தில் உள்ள மகிழம் அரங்கில் நடைபெற்றது.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோவையில் உள்ள பேரூர் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்பு மிக்க கிணறு, குனியமுத்தூர் வாய்க்கால், மலுமிச்சம்பட்டி குட்டை என அனைத்திலும் அதிகம் காணப்பட்ட குப்பை, சீமைகருவேல மரங்கள், புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், குளங்களை தூர்வாரியும் வருகின்றனர்.

இந்த களப்பணியில் வாரந்தோறும் அதிக அளவிலாக தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை செய்து வருகின்றனர். மேலும், இப்பணிகளில் நமது கோவை நமது பசுமை, இ.எஸ்.ஐ அமைப்பு, தமிழ் பவுண்டேஷன் கனடா, கேமரூன் உற்பத்தி நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து தூய்மை பணியை செய்தும், குளங்கள் பாதுகாக்க நிதி உதவியும், பொருளுதவியும் செய்து வருகின்றனர்.

எனவே, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டு இன்றுவரை நடைபெற்ற களப்பணியோடு இருபது வாரங்கள் தொடர்ந்து பொதுமக்களும், தன்னார்வலர்களும் களப்பணியாற்றி வருவதைத் தொடர்ந்து இவர்களை சிறப்பிக்கும் வகையிலும் மேலும் தொடர் பணியாற்றுவது குறித்தும் இந்த கலந்தாய்வில் பேசப்பட்டது. இதில், தன்னார்வலர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்களும் வீடியோ மூலமாகவும் கலந்துரையாடினர்.



இந்த கலந்துரையாடல், நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாங்கள் இது போன்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருவதைப் பற்றியும், கோவையில் நீர்வளம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்ற முக்கிய தகவல்கள் குறித்தும் பேசினர். மேலும் இந்த களப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...