கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவக்கம்

கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் 48-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமையன்று (நேற்று) இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கப்பட்டது. இந்த வழிபாட்டு நிகர்ச்சில் கோவில் தந்திரி சிவபிரசாத்நம்பூதிரி தலைமை வகித்தார். இந்து சமய இணை ஆணையாளர் ஆ.இளம்பரிதி முன்னிலை வகித்தார். 



இதனைத்தொடர்ந்து, நாளை (ஜூன் 26) 2-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் ஐயப்ப சேவா சங்கத்தின் 62-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.



தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், யானைகளுடன் ரதம், செண்டை வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.



திருவிழா நாட்களில் தினமும் காலையில் யானை வாத்தியத்துடன் சிறப்புப் பூஜைகளும் நடைபெறவுள்ளது.



கோவையில் பிரசிதிபெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் இச்சிறப்பு வழிபாட்டினைக் காண கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...