கோவை கங்கா மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்



இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

கோவையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையான கங்கா மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வரும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. விபத்தின் போது காயமடைபவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வரவும், இருதய நோயாளிகள், உடல் உறுப்பு தானம் போன்றவற்றிக்கு இந்த சேவை அதிகளவில் உதவியாக இருக்கும். இந்த ஏர் ஆம்புலன்ஸில் 2 விமானிகள் 1 நோயாளி 1 மருத்துவர், 1 நோயாளியின் உறவினர் பயணிக்கலாம்.



மேலும், இதற்காக விமான போக்குவரத்துத் துறை அனுமதியுடன் பிரத்யேகமாக ஹெலிப்பேடு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இந்த ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு உள்ளது.



இரண்டு விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்திற்கு 1.25 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கங்கா மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று இந்த ஏர் அம்புலன்ஸ் சேவையின் பயண்பாடுகள் குறித்தும், மருத்துவர்கள், விமானிகள் உள்ளிட்டோர் அவசர கால பணிகள் குறித்தும் ஒத்திகை நிகழ்த்தினர்.



இதுகுறித்து, கங்கா மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், 1999 காலகட்டத்தில் நடைபெற்ற கார்கில் போரின் போது பாதிக்கப்பட்ட ஏராளமான போர் வீரர்கள் விமானம் மூலம் டெல்லி, காஷ்மீர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டனர். 17 இந்திய விமானங்களை ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றலாம்.

1999 கார்கில் போருக்கு பிறகு இந்திய விமானப் படை ஏர் ஆம்புலன்ஸ் 2007-ல் துவங்கப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க இதில் அனைத்து வசதிகளும் உள்ளது. தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோல்டன் ஹவரில் காப்பாற்றப்பட்டேன். இதனாலேயே இந்த ஏர் ஆம்புலன்ஸ் முக்கியத்துவத்தை நான் அறிந்தேன். இம்மாதிரியான சேவைகளால் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவை அளிக்க வாய்ப்புகள் உள்ளது" என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது, டாக்டர். ராஜசேகரன், டாக்டர். சண்முகநாதன், டாக்டர். ராஜசபாபதி, கணக வள்ளி சண்முகநாதன், ஏர் மார்ஷல் அனில் பெகல், ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா, மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...