பருவ மழை துவக்கத்தால் புத்துணர்ச்சி பெரும் கோவை!

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத துவக்கத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்குவதில் கடந்த சில நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கோவையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கோவை சுற்றுவட்டார பகுதிகளான உதகை, வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதியில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பொள்ளாச்சி பகுதியிலும் மற்றும் கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதங்களில் தமிழகம் முழுவதும் வாட்டிய வெயிளின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கியிருப்பதால் உதகை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வறட்சியின் பிடியில் இருந்து புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...