பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாரதியார் பல்கலை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 900-க்கும் மேற்பட்டோர் இன்று ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர்களாக 900-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 65-யை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களை பிற பல்கலைக்கழகங்களில் பணியில் அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (இன்று) 957 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாரதியார் பல்கலைக் கழக ஊழியர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...