ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் சார்பில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்டர்னல் புகார் அமைப்பின் சார்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கே.வி.சுரேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிதா ராஜகோபால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்தினைப் பொருத்தே சமூகத்தின் முன்னேற்றமும் அளவிடப்படுகின்றன" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாசகத்தை நினைவுகூர்த்து உரையாற்றினார். 

தொடர்ந்து, பணியிடத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்புணர்வு குறித்தும், அதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்டர்னல் புகார் அமைப்பின் (ஐசிசி) ரேனு தாமஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். ஐசிசி உறுப்பினர் மரியா யேசுராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக ஏ.விஜயசித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை ஐசிசி உறுப்பினர் பி.எஸ்.சாந்தினி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...