வேளாண் பல்கலையின் ஆதரவுடன் செயல்படும் மண்ணில்லா விவசாயப்பண்ணை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.  இவ்வியக்ககம் வேளாண் தொழில் முனைவோர், வேளாண் சார் தொழில் புரிவோர் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்து வேளாண் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் உதவியுடன் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு காப்பகத்தை நிறுவி வேளாண் வணிக காப்பக அமைப்பாக 2011ல் பதிவு செய்து வேளாண் சார்ந்த 182 தொழில் முனைவோருக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கி வழி நடத்துதல் மூலம் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்றது.



வேளாண் வணிக மேம்பாட்டு காப்பக உறுப்பினர் பிரபு சங்கர் புனேவில் வேளாண் துறையில் பி.டெக் படிப்பு முடித்துவிட்டு ஏரோபோனிக்ஸ் அடிப்படையிலான தானியாஸ் ஆர்கானிக் என்ற பெயரில் 30 ஆயிரம் சதுர அடியில் ஏரோபோனிக்ஸ் கூடம் ஒன்றை பல்லடத்தில் உள்ள செங்கோடம்பாளையம் கிராமத்தில் நிறுவி உள்ளார். இம்முறையின் மூலம் பயனற்ற விவசாய நிலங்களையும் பயன்படுத்த இயலும். தனித்துவம் வாய்ந்த இத்தொழில் நுட்ப முறையில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்  மண்ணின் துணையில்லாமல் நுண் நீர் தெளிப்பான் மற்றும் ஈரக்காற்றின் உதவியுடன் பெரும்பாண்மையான சமவெளி மற்றும் மலை பிரதேச காய்கறிகள் பயரிடப்படுகின்றன. முழுவதுமாக கட்டுபடுத்தப்பட்ட பசுமை குடில் 40 சதவிகிதம் சூரிய ஒளி ஊடுருவல் மற்றும் 60 சதவிகிதம் சூரிய ஒளி பரவுதலை அனுமதிக்கிறது. “கோடக” வடிவிலான ஏரோபோனிக்ஸ் கட்டமைப்புகள், தானியங்கி பாசன முறை, சீதோஷ்ண நிலைக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்ளும் தானியங்கி சூழல் ஆகியவை ஏரோபோனிக்ஸ் முறையின் சிறப்பம்சமாகும். 



இந்த ஏரோபோனிக்ஸ் முறையில் நாளொன்றுக்கு 900 கிலோ காய்கறி உற்பத்தி செய்வதற்கு சுமார் 6000 லிட்டர் தண்ணீரே போதுமானது. நாள் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் தண்ணீர் தொடர்ச்சியாக செடியின் வேர் பகுதிக்கு தெளிக்கப்படுகிறது. பயிர்கள் சுமார் 2000 லிட்டர் தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. மீதமுள்ள தண்ணீர் மறு சுழற்சி செய்யப்படுகிறது.

இம்முறையின் மூலம் கேரட், பாகற்காய், காலிபிளவர், பீட்ரூட், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகள் போன்ற அனைத்து முக்கிய காய்கறிகளும் எளிதாக பயிரிடலாம்.



ஏரோபோனிக்ஸ் முறையில் மண் இல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே பாசனத்திற்கு உபயோகிப்பதால் மண் மற்றும் நீரின் மூலம் பரவக் கூடிய பூச்சிகள் மற்றும் நோய் தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மண்ணிற்கு பதிலாக நுரை பஞ்சு உபயோகிக்கப்படுகிறது. செடிகள் ஓரளவு வளர்ந்தவுடன் ஆதரவிற்காக மேலே உள்ள கம்பிகளில் கட்டப்படுகிறது. இந்த ஏரோபோனிக்ஸ் கூடத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி, தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் எஸ்.என்.ஏ.ஜின்னா, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் இரா. முருகேசன் ஆகியோர் வருகை புரிந்தனர். அவர்களுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் நபார்ட் வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...