பண மோசடி வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகருக்கு ஜூலை 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்



கர்நாடக அரசின் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபரிடம் பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு வருகிற ஜூலை 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், கணபதி பகுதியில் சமையலறை சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் ராஜவேலு என்பவரிடம் கடந்த 21.12.2010 அன்று கர்நாடகாவிலிருந்து அழைப்பதாக பிரகாஷ் என்பவர் பேசியுள்ளார். அப்போது கர்நாடக அரசுக்கு சமையல் உபகரணம் வாங்க ஒப்பந்த புள்ளி கோர உள்ளதாகவும், அதற்காக முதல் படிவம் பெற வேண்டும் எனக் கூறி 43 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

பின்னர் இரண்டாவது கொள்முதல் செய்வதற்கான படிவம் வாங்க 1.37 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் பெற்ற அவர், மேலும் 2 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் மீதத்தை திருப்பி செலுத்தி விடுவதாகவும் உறுதியளித்துள்ளார். அது மட்டுமின்றி வைப்பு தொகையாக ரூ.3.50 லட்சம் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜவேலு ஆன்லைன் மூலம் கர்நாடக அரசை தொடர்பு கொண்டபோது, தன்னிடம் பணம் பெற்றது போலியான நபர் என தெரிய வந்தது.

இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக சுகேஷின் தந்தை சந்திரசேகரும் இரண்டாவது குற்றவாளியாக சுகேஷும் சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணைக்காக கடந்த 8-ம் தேதி சுகேஷ் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவரை 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அதிகாலை டெல்லியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் கோவை அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவரை வருகிற ஜூலை மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து கோவையிலிருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுகேஷ் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் டெல்லி அழைத்து செல்லபட இருக்கிறார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...