பாஜக-வின் குடியரசு வேட்பாளருக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் சிறுபான்மை மக்களின் விரோதிகள்- புதிய தமிழகம் கட்சி தலைவர் விமர்சனம்

பாஜக-வின் குடியரசு வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்க்கு எதிராக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

எளிய தலித் ஒருவரை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்த பாஜக-விற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ராம்நாத் கோவிந்திற்கும் எனது வாழ்த்துக்கள். ராம்நாத் கோவிந்தை பாஜக தேர்வு செய்திருப்பது சமூக நீதியின் புதிய பரிணாமம். ராம்நாத்கோவிந்துக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிக்க வேண்டும். அவரை போட்டியின்று ஏக மனதாக தேர்வு செய்ய வேண்டும். 

எதிர்கட்சிகள் சார்பில் ஒரு பொது தலித் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு பதில் அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி, ராம்நாத் கோவிந்த் தொடர்பாக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என்று விமர்சனம் செய்தார்.

மேலும், தலித் வேட்பாளரை பாஜக-வே தேர்வு செய்த பிறகு இதுபோன்ற கருத்துக்களை கூறுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் கிருஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு, அவர் ஜனாதிபதி ஆகும் பட்சத்தில் மத சிறுபான்மையர்களும், சமூக சிறுபான்மையர்களும் நிச்சயமாக பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...