மரம் வடிவத்திலான வை-ஃபை மற்றும் காற்று மாசுபாட்டினை அளக்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சியில் அறிமுகம்

கோவை மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முதலில் அறிமுகபப்டுதப்படுள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்பட்டுள்ளது.

மரம் வடிவிலான ஸ்மார்ட் ட்ரீ:



மரத்தைப் போன்று வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் ட்ரீ இந்தியாவில் முதல்முறையாக பொது மக்களுக்கு நிழல் தரும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு 'ஸ்மார்ட் ட்ரீ' அமைப்பதற்கு 3.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 9 அடி ஆழத்தில் கான்ங்கீரட் மூலமாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 12 அடியாகும். 400 சதுரஅடியில் தரை தளத்தில் செயற்கை புல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பொதுமக்கள் அமருவதற்கு இருப்பிடம் வசதியும் இந்த ஸ்மார்ட் ட்ரீ-யின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேனல்கள் மூலம் 120 சதுரடியில் மேல் பகுதியில் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஆற்றல் கொண்ட சோலார் மூலம் ஒரு நாளைக்கு 8 யூனிட் வரை மின்சாரம் பெற முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், 'முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது' எனக் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...