பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட்டுகள் உண்ணாவிரதம்


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரை தமிழக கேரள கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது போலி சிம் கார்டு, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கேரள மற்றும் ஆந்திராவிலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதல் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ள மாவோயிஸ்ட்டு இயக்கத்தினை சேர்ந்த அனூப்பை சந்திக்க கடந்த வாரம் சிறைச்சாலைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மற்றும் சர்மா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் சிறை விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதனைக்கண்டித்து மத்திய சிறையில் உள்ள அனூப் மற்றும் வீரமணி ஆகியோர் மத்திய சிறைசாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...