கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி துவக்கம்!

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை காப்பாற்றும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த 18 வாரங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்களில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் இன்று 19-வது வாரமாக தமிழர்களின் நீர் மேலாண்மைக்கும் கட்டிட கலைக்கும் முன்னுதாரணமாக இருக்கும் ஆழி கிணற்றை மீட்கும் களப்பணி மற்றும் பசுமையை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இன்று கோவை சுண்டக்காமுத்துர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிணறு தூய்மை படுத்தும் பணியில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். கலப்பணியின் போது 7 அடி ஆழமுள்ள மண் அகற்றப்பட்டது.



மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்களின் பரப்பளவு குறைந்துள்ளதால் மழையளவு குறைந்துள்ளது. எனவே மழையளவை அதிகரித்து நீர் வளங்களை மீட்கும் வகையில் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க களப்பணி முடிந்தவுடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 5000 விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன.



இதனிடையே, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குளத்திற்கு கரை அமைக்கும் பணியில் இன்று நான்கு  ஜே.சி.பி இயந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணியானது செங்குளம் தன்னார்வலர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...