புரவங்கரா, கோவையை ‘பசுமை கோயம்புத்தூர்’ ஆக மாற்றும் முயற்சியாக ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியை மேற்கொள்கிறது

புரவங்கரா, கோயம்புத்தூர் மாநகரை பசுமையான கோயம்புத்தூர் ஆக மாற்றும் முயற்சியாக, மாபெரும் ‘மரம் நடுதல்’ என்னும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது, செல்வபுரத்தில் அமைந்திருக்கும் ப்ராவிடெண்ட் க்ரீன் பார்க்கில் நடைப்பெற்றது. 



புரவங்கரா மேற்கொண்டிருக்கும் ‘மரம் நடுதல்’ முயற்சியானது, எழில் கொஞ்சும் கோவை நகரின் பழைய அழகையும், இயற்கை சுற்றுப்புறத்தையும் மீட்டெடுக்கும் நல்லெண்ணத்தின் ஒரு சிறிய வெளிப்பாடாகவும், முயற்சியாகவும் அமைந்திருக்கிறது.

‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு முதல்  மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், புரவங்கரா நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆபரேஷன்ஸ், வீரராகவன் கலந்து கொண்டார். ‘மரம் நடுதல்’ முயற்சியைக் குறிப்பிட்டு அவர் பேசுகையில், நம்முடைய எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, நமது சுற்றுச்சூழலை  பாதுகாப்பதிலும், தொடர்ந்து நீடித்து இருக்கக்கூடிய இயற்கைச் சூழலையும் உருவாக்குவதிலும் புரவங்கரா மிகவும் அக்கறையுடனும், அதிக உத்வேகத்துடனும் செயல்பட்டுவருகிறது. அத்தகைய முயற்சியில், இந்த ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சி ஒரு சிறிய அங்கமாகும். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் சமூகத்திற்கு  வளமையையும், வளர்ச்சியையும் அளிக்கும் வகையில் புரவங்கரா தொடர்ந்து தனது பங்கினை நிச்சயம் வழங்கும். இங்கு வசிக்கும் மக்கள் இயற்கை சூழ்ந்த பசுமையான சூழலில் வாழ்வது சாத்தியப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் அவர்களுடைய சுற்றுச்சூழலானது என்றென்றும் இயற்கையுடன் அமைவதில் நாங்கள் பங்கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.



ப்ராவிடெண்ட் பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் ப்ராவிடெண்ட் ஹவுஸிங்கின் பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில் ஒன்றாக கைக்கோர்த்ததன் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...