சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம்

கோவை மாநகரில், காந்திபுரம் பகுதியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக் குழு அலுவலகத்தின் மீது மதவெறிகொண்ட, சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மாற்றுக் கருத்துக்களையும், ஜனநாயக பூர்வமான விமர்சனங்களையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற, சங்பரிவாரக் கும்பல்களின் வன்செயல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்கும் நடவடிக்கையில் ஒரு பிரிவு மதவெறிக் கும்பல் ஈடுபட்டதையும், மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்ற தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை அலுவலர்கள், பசுப்பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதையும் கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை சகித்து கொள்ள முடியாத, சமூக விரோதக் கும்பல் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தை தாக்கியுள்ளது. பசுக் காவலர்கள், காதலர் கண்காணிப்புக் குழுக்கள், மதக் காவலர்கள் என்ற பெயர்களில் செயல்படும் வன்முறைக் கும்பல்களுக்கு ஆதரவுகாட்டும் மோடி அரசின் கொள்கைகள் வன்செயல்கள் அதிகரிக்க காரணமாகும். 

தமிழ்நாடு அரசு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கண்டறிந்து, கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கு எதிராக இடதுசாரிகள், ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள், சமூக நல்லிணக்கம் காப்போர், அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...