குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்து சுக்கரவார்பேட்டை பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார்

குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் சுக்கரவார்பேட்டை பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முறையிட்டனர்.

கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை குடிக்க நேரிடும் சூழலால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், 2000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, சுக்கரவார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதை எடுத்து வந்து, முறையாக குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சனையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...