கோவையில் மாட்டு தலையுடன் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவையினர் கைது

மத்திய அரசு மிருகவதை சட்டத்தில் திருத்தம் செய்து புதிய உத்தரவு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த உத்தரவின்படி, நாடு முழுவதும் இனி மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் நாடெங்கிலும் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. பல கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்தும் வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் கடுமையான எதிர்ப்பினை நேரடியாக பதிவு செய்தன.



இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, சிலர் மாட்டின் தலையுடன் வந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் மாட்டு தலையை பறிமுதல் செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...