கோவையில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து கோவை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பவ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை டவுண்ஹால் பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதை தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்க அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் மறையிட்டனர். 

ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைய முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக டவுண்ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...