பயிற்சி வகுப்பு நடத்த முறையான திட்டமிடல் இல்லை என்று கோவை அரசு மருத்துவமனை முன்பு உதவி மருத்துவர்கள் தர்ணா

பயிற்சி வகுப்புக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் தங்களை சிரமப்படுத்துவதாகக் கூறி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை புத்துணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி வகுப்பு நடத்த கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்த பயிற்சி வகுப்பு மதியம் வரையில் தொடங்கப்படவில்லை. இதனால், இந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த 60-க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தங்கும் இடத்தை கூட ஏற்பாடு செய்து தரவில்லை என்றும், போதிய அடிப்படை வசதிகள் கூட செய்து தராததால் பெண் உதவி மருத்துவர்கள் அவதியுற்றனர் என்றும் கூறி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரயில்நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்-யில் அவர்களுக்கான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த தர்ணா போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...