சேலம் ரயில்நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறைகள் திறப்பு

ரயில்நிலையங்களை பயணிகளுக்கு குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் உதவும் வகையில் மேம்படுத்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, இன்று (14.06.2017) காலை சேலம் ரயில்நிலையத்தின் 3-4 நடைமேடைகளில் சீர் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதியுடன் கூடிய கழிப்பறைகளை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால் அவர்கள், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு. விஜுவின், கோட்டப் பொறியாளர் திரு எம்.மாரியப்பன், உதவி வணிகமேலாளர் திரு எம்.ஷாஜஹான், சேலம் ரவுண்ட் டேபிள் 28 அமைப்பை சேர்ந்த திரு.சுப்பு, திரு.கமலேஷ், திரு, கார்த்திக்  மற்றும் இதர ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைத்தார். 



சேலத்தில் உள்ள 28 ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாக இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 



நிகழ்ச்சியில் பேசுகையில் திரு.சந்திரபால் அவர்கள் தெற்கு ரயில்வேயுடன் கை கோர்த்து மாண்புமிகு இந்தியப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்நிலையங்களில் இத்தகு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முன்வந்ததற்கு ரவுண்ட் டேபிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். 



ரவுண்ட் டேபிள் அமைப்பின் திரு.சுப்பு பேசுகையில் சேலம் ரயில் நிலையத்தில் கழிவறைகள் 6.5 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய ரயில்வேயுடன் இணைந்து இது போன்ற மேலும் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். திரு விஜுவின் பேசுகையில் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...