கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட்டுக்கு பென்டிரைவ் கொடுக்க முயன்ற இருவருக்கு நீதிமன்ற காவல்

கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட் அனூப்பிடம் ஆடையில் மறைத்து எடுத்துச்சென்று பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்டுகள் அனூப் மற்றும் சைனா ஆகியோரை பார்க்க கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகிய இருவர் நேற்று வந்தனர். சிறை அதிகாரிகள் அனுமதி பெற்று மாவோயிஸ்ட்டுகளை சந்திக்க சென்ற போது, அவர்கள் கையில் அனூப்பிற்கு கொடுக்க ஆடைகள் வைத்திருந்தனர்.

அந்த ஆடைகளை சோதனையிட்ட போது, சட்டையில் ஒரு பென் டிரைவ் இருப்பது தெரியவந்தது. அந்த பென் டிரைவினை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் எந்த தகவல்களும் இல்லை. இது குறித்து ரஷீது, சர்மா ஆகியோரிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, சிறைவாசலில் இருந்த தினேஷ் என்பவர், அனூப்பிடம் இந்த சட்டையை வழங்கும் படி கூறியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரையும் சிறைத்துறை அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும் தினேஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகிய இருவர் மீதும் தடை செய்யப்பட்ட பொருளை சிறைக்குள் எடுத்து செல்லுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ரஷீது என்பவர் கேரளாவை சேர்ந்த மாவோயிஸ்ட்டான மொய்தீன் என்பவரது சகோதரர் என்பது குறிப்பிடதக்கது.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று காலை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேலுசாமி முன்னிலையில் போலீசார் அஜர்படுத்தினர். இதையடுத்து, இருவரையும் வருகின்ற 27-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறைவைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...