திமுக சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் காலமானார்

திமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் (77) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

பேரூர் நடராஜன் 1977 மற்றும் 1984, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் பேரூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ-வாகவும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராகவும் செயல்பட்டு உள்ளார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பேரூர் நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) அதிகாலை உயிரிழந்தார்.

அவரது இறுதி நிகழ்விற்கு கோவை மாவட்ட திமுக-வினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...