கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்த சோதனை தீவிரம்: உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பேட்டி

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்காளத்தில் பிளாஸ்டிக் அரிசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதில் சமைக்கும் உணவு ரப்பர் போன்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து தெலுங்கானா மாநில உணவுப்பொருள் வழங்குதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

உணவு பொருட்களில் பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படுவதால், செரிமானக் கோளாறு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். மேலும், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். ஆனால், ‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று’ உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். இருந்த போதும், தமிழக மக்கள் பிளாஸ்டிக் அரிசியால் அச்சம் கொண்டுள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மளிகை கடைகளில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் 485 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக 9444042322 என்ற என்னிக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:- பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக கடந்த 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகிறோம். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி மண்டிகள், மளிகை கடைகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 29 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 16 இடங்களில் இருந்து அரசி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். கோவையில், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்டிக் அரசிகள் எதுவும் சிக்கவில்லை. பொதுவாக தமிழகத்தில் அரசி உற்பத்தி மிக அதிகம், அதனால் இங்கு பிளாஸ்டிக் அரசி வருவதற்கு வாய்ப்பு இல்லை. கோவைக்கு காங்கேயம் போன்ற பல பகுதிகளில் இருந்து அதிகப்படியான அரிசி கிடைக்கிறது. தேவைக்கும் அதிகமான அளவில் இங்கு அரிசி இருப்பதால் கோவையில் பிளாஸ்டிக் அரிசிக்கு இடமில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எங்களுக்கு புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...