நிலகிரியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் உட்பட 30-க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், இரசயல் கட்சியினர் என பலதரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காரைகொர்ன், ஜெகதளா தினட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் இதுவரை அப்பகுதியிலிருந்து கடையை அகற்றவில்லை.

இதனைத்தொடர்ந்து, இன்று டாஸ்மாக் கடை முன்பு தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் தலைமயில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், காவல்துறையினரின் தடைகளை மீறி தமிழ் மாநில இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் உட்பட 30-க்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் மீது அக்கறையின்றி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவழக்குகளில் சம்மந்தப்பட்ட டிடிவி தினகரனை சந்திப்பது கண்டனத்துக்குறியது. இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும் என கூறினார்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...