தமிழகத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது சிபிஐ முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் பாஜகவின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இரு நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசின் 3 ஆண்டு கால ஆட்சி, தமிழக அரசின் ஓராண்டு கால ஆட்சி, காவிரி நதிநீர் ஆணைய விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், வருகின்ற 29ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார பேரியக்கம் நடத்தப்படும் எனவும் 6 பயணக்குழுக்களாக பிரிக்கப்பட்டு 1000 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு ஜூலை 5ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, யெச்சூரி தாக்கப்பட்டதற்கும், மத்திய பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்தார்.

மணல் கொள்ளையை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையை துரிதப்படுத்துவதோடு மணல் விலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டிய அவர், குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதால் அங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் மோடியின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...