கோவையில் டாஸ்மாக் கடைக்கு இடம் அளித்தவர் வீட்டின் முன்பு துடைப்பத்துடன் பெண்கள் போராட்டம்


கோவை அருகே டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க இடம் அளித்தவர் வீட்டின் முன்பு பெண்கள் துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் அதிகரித்து வருகின்றது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக புதிதாக கடைகள் அமைக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர்- மாதப்பூர் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் புதன்கிழமை திடீரென அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாதப்பூர் சாலையில் இருந்து துடைப்பத்துடன் டாஸ்மாக் கடை அமைக்க நிலம் கொடுத்த ராமசாமி என்பவரது வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்று அவரது வீட்டின் அருகே கையில் துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என பெண்கள் போராடி வரும் நிலையில் நில உரிமையாளர் டாஸ்மாக் கடைக்கு இடம் வழங்கியது வேதனை அளிப்பதாகவும், முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்க வந்துள்ளதாகவும் கூறினர். மேலும், இந்த கடை அமைக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்ததாகவும், தங்களின் கோரிக்கையை மீறி கடை திறக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாகும் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறைனர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இரவு நேரத்தில் டாஸ்மாக கடை அமைக்க இடம் கொடுத்தவர் வீட்டின் முன்பு துடைப்பத்துடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...