விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வண்டல் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தூர்வாரி வண்டல் மண் வழங்கும் பணி குறித்து வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், முதலமைச்சரின் உத்தரவின்படி கோவை மாவட்டத்திலுள்ள ஏரிகள் மற்றும் 246 குளங்களில் தூர்வாரும் மற்றும் இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் 4000 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.



வட்டாட்சியர் அலுவகத்தில் விவசாயிகள் சிட்டாவுடன் விண்ணப்பித்து, வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வண்டல் மண் எடுக்க உத்தரவு வழங்கிட வேண்டும்.

விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் மண்ணும், புஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் அளவிற்கும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர், அல்லது 10 டிராக்கடர் லோடு மண்ணும், மண்பாண்டங்கள் தயாரித்தலுக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு மண்ணும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு குளங்கள் தூர்வாருவதன் மூலம் குளங்களை ஆலப்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகளின் விலைநிலங்களுக்கு பயன்படுத்துவதற்கான உரமண்ணும் விலையில்லாமல் கிடைக்கிறது. மேலும், மழைக்காலங்களில் போதிய அளவு நீர் தேக்கிக்கொள்ள முடியும். இதன்மூலம் எதிர்க்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாய பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

கோவை மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திர சேகர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலாகள், பொதுப்பணித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...