கோவை பேங்க் ஆப் இந்தியா சார்பில் “ஸ்டார் மஹொத்சவ்” விழா

கோவை மண்டல பேங்க் ஆப் இந்தியா சார்பில் ‘ஸ்டார் மஹொத்சவ்’ விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழிப்புணர்வு விழா நாடு முழுவதும் உள்ள 5200 வங்கி கிளைகளில் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நோக்கமே வங்கி வாடிக்கையாளர்களை அவர்களின் வீடு தேடிச் சென்று சந்திப்பதுதான்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாராக் கடன் வசூல், புதிய வீட்டு, வாகன கடன்கள் வழங்குதல், தொழில் மற்றும் விவசாய கடன் வழங்குதல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பிஓஎஸ் மெஷின்கள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 

இந்த விழிப்புணர்வு விழாவை ஆர்.என். புரம் கிளையில் மண்டல மேலாளர் தி.ரவீந்திரன் துவக்கி வைத்தார். கிளை ஏ.ஜி.எம். டி.வி.ராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வீடு, தொழில் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான கடனுதவி அளிக்கப்பட்டது. இதைத் தவிர, சூலூர், காந்திபுரம், கோவை பிரதான கிளை ஆகியவற்றில் நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவிலும் ரவீந்திரன் பங்கேற்று, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், சுவர்ணபுரி கிளையில், நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவை துணை மண்டல மேலாளர் டி.டி.சீனிவாச ராவ் துவக்கி வைத்தார். மதுரை ஜெய்ஹிந்த புரம் கிளை நடைபெற்ற விழாவை துணை மண்டல மேலாளர் கே.பாண்டியன் துவக்கி வைத்தார். 

கோவை மண்டலத்தில் நடைபெற்ற இவ்விழாவின் மூலமாக மொத்தமாக ரூ.46 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.3 கோடி மதிப்பிலான வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் கிளை, துணை பொது மேலாளர், டி.வெங்கடேஷ்வர ராவ், கோவை மண்டல அலுவலக துணை பொது மேலாளர் கௌரிசங்கர் ராவ் மற்றும் வி.எஸ்.சோமசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...