தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு புதிய வாகனங்கள் சேவை துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி கொடியசைத்து 11 ஜீப்களை 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு வழங்கினார்.



தமிழ்நாட்டில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் பாலமாக இருந்து செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்பங்களை மதிப்பீடு செய்தல், மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முதல் நிலை செயல்விளக்கங்கள் மூலம் புதிய இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரவலாக்கம் செய்தலை முதன்மைக் குறிக்கோள்களாக கொண்டு வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள 30 வேளாண்மை அறிவியல் நிலையங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் வேலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆற்றிய சாதனைகளுக்காக “சிறந்த மண்டல வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கான விருதை” பெற்றுள்ளது. 

மேலும், கடலூர் வேளாண் அறிவியல் நிலையம் தேசிய அளவில் சிறந்த பயறுவகை பயிர்களுக்கான கூட்டு முதல்நிலை செயல் விளக்கத்திடலுக்கான விருதை பெற்றுள்ளது.

உழவர் பெருமக்களின் நன்மைக்காக விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இப்பல்கலைக்கழகம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு ரூபாய் 92 லட்சம் செலவில் 11 பொலிரோ ஜீப்களை வாங்கியுள்ளது.

இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கொடியசைத்து வைத்து, வாகனங்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

முனைவர் ஹெ. பிலிப், விரிவாக்கக் கல்வி இயக்குநர், பொறியாளர் எஸ். செந்தில் குமார், வளாக அலுவலர், பல்கலைக்கழக இயக்குநர்கள் மற்றும் துறை தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...