கோவை மாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.


மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க  தவறிய கோவை மாநகராட்சியைக் கண்டித்து திமுக-வினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவை  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக கூறி முழக்கங்கள் எழுப்பட்டது.

இதனை தொடர்ந்து பேட்டியளித்த வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி கூறியதாவது:- கடந்த  திமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்வு கண்டது. தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலை மாறிவிட்டது.

கடந்த 6 மாத காலமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக மாறி இருக்கிறது. சாலைகள் சரி செய்யப்படாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் 24 நாட்களுக்கு ஓரு முறை மட்டுமே மக்களுக்கு  தண்ணீர் வழங்கப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை. தெரு விளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை. 

மேலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக அதிமுக உள்ளது. அவர்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் வரை திமுக தொடர் போராட்டம் நடத்தும்" இவ்வாறு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...