ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புகையிலை தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் விழிப்புணர்வு பென்டிரைவ் வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர் பி.குகன் தலைமையில் இயங்கும் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு கல்வியளித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்தின் தெற்கு, மேற்கில் உள்ள 6 மாவட்டங்களில் 1300-க்கும் மேற்பட்ட இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்களை தீபம் திட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 27 கோடி புகைப்பிடிப்போரில் புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படும் புற்றுநோயால் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். புகைப்பிடிப்போருக்கும், புகையிலை பயன்படுத்துவோருக்குமிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, இந்த ஆண்டு புற்றுநோய் எதிர்ப்பு வாசகம் "உங்களது நுரையீரலை சேதப்படுத்தாதீர்கள்" என்ற கருத்தின் அடிப்படையில் அமைத்துள்ளது. நுரையீரல் வடிவிலான பெண் டிரைவ், இந்தியாவில் முதல் முறையாக இதற்கென வெளியிடப்பட்டுள்ளது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த அனைத்து விபரங்களுடனும் உள்ள இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பெண் டிரைவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டது.

இதில், அனைத்து வகையான புற்றுநோய்கள், அவற்றின் ஒவ்வொரு படிகள், கண்டறிதல் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகள் போன்றவை ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளன. "No Smoking"மொபைல்ஆப்-ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளாம். இதுவே, புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட வழிகாட்டும்.

இந்த ஆண்டு தீபம் திட்டம் இரண்டில் 2012- 2017 வரையில் இந்த நிறுவனம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும் இணைந்து நடத்திய வாய்ப்புற்று நோய் பரிசோதனை முகாமில் கிடைத்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 116 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 136 தனிப்பட்ட முகாம்களில் 70230 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

பள்ளிகள், கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலைகளில் உள்ள பணியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினால் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்கான பென்டிரைவ் இலவசமாக வழங்கப்படும் என மருத்துவர் பி.குகன் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பென்டிரைவ் திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர். டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் மற்றும் கதிர்வீச்சியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கார்த்திகேஷ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...