தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - எம்.பி. டி.கே.ரங்கராஜன்.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் 47 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம், கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்றது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது என்பது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டார். மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்வதை தடை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பல மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், இதன்மூலம் நாடு தழுவிய ஒன்றுபட்ட நடவடிக்கை எடுக்க வைக்கும் பெருமை வாய்ந்த பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்திய நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிமுக பெரிய சிக்கலில் இருப்பதாகவும், தினசரி செத்து செத்து பிழைப்பதால் மத்திய பாஜக அரசிற்கு எதிராக பேச பயப்படுகிறது எனவும் அவர் கூறினார். வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி ஆரம்பிக்கலாம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அது அவரது ஜனநாயக உரிமை என அவர் தெரிவித்தார். 

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். குடியரசு தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் சோதிடம் சொல்வது புத்திச்சாலித்தனம் இல்லை என பதிலளித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...