தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - எம்.பி. டி.கே.ரங்கராஜன்.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் 47 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம், கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்றது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது என்பது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டார். மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்வதை தடை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பல மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், இதன்மூலம் நாடு தழுவிய ஒன்றுபட்ட நடவடிக்கை எடுக்க வைக்கும் பெருமை வாய்ந்த பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்திய நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிமுக பெரிய சிக்கலில் இருப்பதாகவும், தினசரி செத்து செத்து பிழைப்பதால் மத்திய பாஜக அரசிற்கு எதிராக பேச பயப்படுகிறது எனவும் அவர் கூறினார். வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி ஆரம்பிக்கலாம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அது அவரது ஜனநாயக உரிமை என அவர் தெரிவித்தார். 

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். குடியரசு தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் சோதிடம் சொல்வது புத்திச்சாலித்தனம் இல்லை என பதிலளித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...