உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி (நாளை) "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 



முன்னதாக இன்று (மே 27) கோவை புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் கையெழுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.



இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது வழக்கமான கையெழுத்து பிரச்சாரம் போல் இன்றி புதுவிதமாக பத்திரத்தில் கையெழுத்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் "உணவினை வீணடிக்க மாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய பத்திரத்தில் கையெழுத்திட்டு அதனை பெற்றுச் சென்றனர்.



இதுகுறித்து இந்நிகழ்ச்சியின் ஒருகிணைப்பாளர்கள் கூறுகையில், மக்கள் தங்களது வாழ்நாளில் உணவினை வீணடிக்காமல் இருக்கவே இதுபோன்ற பத்திரத்தில் கையெழுத்திடும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் கையெழுத்திடும் குழந்தைகள் சில வருடம் கடந்து மீண்டும் இந்த பத்திரத்தினை பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உணவினை வீணடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்காகவே இவ்வாறான புதிய முறை கையாளப்பட்டுள்ளது" என்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...