கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!


கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருப்பிட மருத்துவ அலுவலரை தாக்கி செல்போனை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலராக செளந்திரவேல் பணிபுரிந்து வருகின்றார்.கடந்த 11ம் தேதி காரமடையை சேர்ந்த கிட்டான் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலன் இன்றி  உயிரிழந்துள்ளார். உறவினர்கள் யாரும் உடனடியாக வராததால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கிட்டானின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுருந்தது.



இந்நிலையில் இன்று அவரது உடலை வாங்குவதற்கு வந்த அவரது உறவினர்கள் தங்கள் உறவினரான கிட்டுசாமியின் உடலை தருமாறு கோரியுள்ளனர்.அப்பொழுது பெயரில் குழப்பம் ஏற்படவே உரிய சான்றிதழ் வாங்கி வரும்படி மருத்துவ அலுவலர் செளந்திரவேல் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து பத்திரிக்கை நிருபர் என கூறிக்கொண்டு வந்த கில்மோர் என்பவரும் அவருடன் வந்த சிலரும்,இருப்பிட மருத்துவ அதிகாரி சௌந்தரவேலுவிடம் வாக்குவாதம் செய்ததுடன்  தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன்  செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் ஒருவரை பிடித்து காவல் துறையில் ஓப்படைத்தனர்.

மேலும மருத்துவரை தாக்கி தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மருத்துவமனை ஊழியர்கள் 
100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவ அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவலர்கள் வழக்குபதிவு செய்துள்ளனர். கில்மோர் அக்னிகதிர் என்ற பெயரில் பத்திரிகை நடத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க போலிசார் தீவிர நடவடிகை எடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...