உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு வங்கி கோயம்புத்தூரின் வைஷ்னவி பாலாஜி நமது சிம்ப்ளிசிட்டி நிரூபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:-

கோவையில் புட் பேங்க் கோயம்புத்தூர் அமைப்பினை துவங்கும் போது எங்களிடம் 4 உறுப்பினர்களே இருந்தனர். தற்போது, நேரடியாக 200 உறுப்பினர்கள் இணைந்து உணவின்றி தவிக்கும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். எங்களது முக்கிய குறிக்கோள் பசியற்ற தேசத்தை உருவாக்குவதே ஆகும். 

வரும் மே 28 ஆம் தேதி உலக பசி தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 27ம் தேதியன்று கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, புட் பேங்க் கோயம்புத்தூரின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆவணப்படத்தையும் திரையிட உள்ளோம்.

மேலும், உலக பசி தினமான 28ம் தேதியன்று குழந்தைகள் மூலம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் குழந்தைகளிடத்தில் சமூகத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கும். மேலும் அவர்கள் உணவின் முக்கியத்துவத்தையும், பசியை ஒழிப்பதற்கான வழிகளையும் கற்றுக்கொள்வார்கள். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, வஉசி பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசித்தோருக்கு உணவு வழங்கப்படும். இந்த விழிப்புணர்வு மற்றும் உணவு இயக்கத்தில் சேர விரும்பும் குழந்தைகள் உணவு வங்கி கோயம்புத்தூரில் தொடர்பு கொள்ளலாம். இது பசி இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கு எங்களது 160-வது முயற்சி ஆகும்" என்றார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...