மழைவேண்டி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் இன்று (மே 22) மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இச்சிறப்பு வழிபாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 



கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் மழைபொழிவின்றி நீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்து சமய அறநிலையங்கள்துறை சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறையின்படி, மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களில் மழைவேண்டி யாகம் நடத்த கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நந்தியை கழுத்தழவு தண்ணீரில் மூழ்கச்செய்தும், மழைவேண்டி கோவில் குருக்களால் தேவாரங்கள் மூலம் சிவனை வேண்டியும், கஜபூஜை நடத்தியும், தீர்த்த தண்ணீர்களை தெப்பக்குளத்தில் பூஜித்து ஊற்றியும் வருண பகவானை வேண்டினர்.



அதுபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களான அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோவில் தேக்கம்பட்டி, அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவில் அன்னூர் வட்டம், அருள்மிகு இராமலிங்கசாமி திருக்கோவில் இடுகம்பாளையம் மேட்டுப்பாளையம் வட்டம், அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் கோட்டை கோவை நகர்வட்டம், அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், உப்பாரவீதி கோவை நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பனர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, உள்ளிட்டோரும், சமூக ஆர்வளர்களும், பொதுமக்களுமென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...