செங்குளத்தை சுத்தப்படுத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர்ந்து பதினைந்தாவது வார களப்பணியாக இந்த வாரம் ஞாயிறன்று காலை 7 மணியளவில் கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த களப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களும் கலந்து கொண்டு  3 டன் அளவிலான பாலித்தீன் கழிவுகளும், கண்ணாடி பாட்டில்களையும் அகற்றினர்.



இதைத்தொடர்ந்து, செங்குளத்தில் களப்பணி முடிந்தவுடன் பேரூர் கோவிலுக்குச் சென்று அங்கு வடக்கு பிரகார சுவரில் இருந்த கல்வெட்டை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பார்வையிட்னர். அப்போது, அந்த கல்வெட்டு குறிப்புகளை கல்வெட்டியல் துறை ஆராய்ச்சி மாணவி சாந்தி விளக்கமளித்தார். அவருடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விஜய்-யும் கல்வெட்டு குறித்து விளக்கமளித்தார்.

இந்நிலையில், அணைக்குள் பாலம் கட்டி நெடுஞ்சாலைத்துறையும், குப்பைக்கிடங்கு அமைத்து உள்ளாட்சித் துறையும் ஆக்கிரமித்துள்ளன. இந்த அணை தற்பொழுது பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ளது.



இந்த தடுப்பணையை தூர்வாரி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதென கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளில் கோரிக்கை மனு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்வெட்டில் குறிப்பிட்டிருந்த தேவிசிறை அணை அதாவது தற்போதைய கோவை தடுப்பணை பார்வையிடப்பட்டது. அங்கு தண்ணீர் சென்ற அளவு குறித்து 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் குறித்துவைத்துள்ள குறிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து சுண்டக்காமுத்தூரிர் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கிணறு ஒன்றும் பார்வையிடப்பட்டது. அந்த கிணறு சிதிலமடைந்து குப்பைகளால் நிறைந்து காணப்படுவதைத் தொடர்ந்து, அந்த கிணற்றை தூர்வாரி வரலாற்று சின்னத்தை மீட்டெடுப்பது என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...