ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

123-சட்டமன்ற உறுப்பினர்கள், 38 அமைச்சர்கள், 48 மாவட்டச் செயலாளர்கள், 98 சதவிகித தொண்டர்களின் பலம் தங்களிடம் உள்ளதாகவும், ஜெயலலிதாவிற்கு மேலே உள்ளதாக சிலர் நினைத்துக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் தரைமட்டத்தில் என்ன நிலவரம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என ஓ.பி.எஸ். அணிக்கு சூசகமாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

ஓ.பி.எஸ், பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனிசாமி ஆகியோர் இணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் என்னை பொருளாளராக நியமித்துள்ளார். சசிகலா பொதுச்செயலாளர் என்ற கடித்தத்தை பார்த்து வங்கி அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சட்டப்படி, முறைப்படி செயல்பட்டு வருகிறது. 

ஜெயலலிதாவால் 7 ஆண்டுகள் பொருளாளராக தான் இருந்தேன். முதலமைச்சராக இருக்கும்போது மகிழ்சியாக இருந்த ஓ.பி.எஸ்., சசிகலா முதலமைச்சராக வரலாம் என்று சொல்லும்போது விலகி விட்டார்.

தமிழக நிர்வாகம் குறித்த ரஜினிகாந்த்-தின் பேச்சிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தான் என்னுடைய கருத்தும். இணைப்பு வேண்டும் என்று சொல்லும் முதல் ஆளான நான் எதுவும் தவறாக பேசாத நிலையில், என்னை ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களையும், வன விலங்குகளையும் இரு கண்களாக பாவிக்கும் அரசு அதிமுக. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவு வன விலங்குகள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் வன அலுவலர்கள் வன சூழலில் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...