வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா



28 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நேரடி நியமனம் வாயிலாக பணியமர்த்தப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 39 வனச்சரக அலுவலர்களுக்கான 2015-17 வனச்சரக பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தில் நடைபெற்றது.

அதிக வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 1948 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பொறுப்பில் சென்ற கோவை தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகம் சார்பில் உதவி வனப்பாதுகாவலர் நிலைக்கு கீழ்ப்பட்ட வன அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பை 1990-ஆம் ஆண்டில் மாநில அரசின் பொறுப்புக்கு வந்தது.



அதில் தமிழ்நாடு, கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 18 மாத பயிற்சியானது மத்திய அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தின் படியும் 19 பாடங்கள் மற்றும் அதுதொடர்பான பயிற்சி கடந்த 2015 ல் துவஙப்பட்டு, பயிற்சி காலத்தில் நாட்டில் மிக முக்கியமான வன சூழல் பகுதிகளுக்கு 146 நாட்கள் கல்வி பயணம் மேற்கொண்டு வனப்பாதுகாப்பு முறைகள் குறித்து கற்றனர்.

மேலும், 10 நாட்கள் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படைப்பிரிவிலும் 8 நாட்கள் கோவை மத்திய தனி பாதுகாப்பு காவல் படைப்பிரிவிலும் சிறப்பு அதிரடி பயிற்சி வழங்கப்பட்டது. 2015-17 ஆண்டின் முடிவில் 6 பெண்கள் உட்பட 39 பயிற்சியாளர்களுக்கு வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இந்த சான்றிதழ் வழங்கும் விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட வனத்துறை அலுவலர் ராம சுப்ரமணியன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

இதில், கேரள மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து 13 பேரும், தமிழகத்தில் இருந்து 5 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 4 பேரும், உத்தரகாண்ட்டில் இருந்து 3 பேரும் மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒருவரும் என 26 பேர் வனத்துறை அமைச்சரிடம் இருந்து இந்த சான்றிதழை பெற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...