இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்கு தேவை என மகளிர் சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமொழி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் ஷரீஅத் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரும்புக்கடையில் நடைபெற்றது. இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்வுக்கு எந்த வகையிலும் முரணானது இல்லை என்பதை பறைசாற்றும் வகையில் பெண்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் ஃபாத்திமா முசஃப்பர் கலந்துகொண்டு இஸ்லாம் கூறும் ஷரீஅத் சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்.

இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தலாக், சொத்துரிமை, திருமணம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ள மார்க்கம் என்பதைத் தெளிவு பட பேசினார். 



காங்கேயம் ஸ்னேஹா சொசைட்டி சர்வீஸ் அற்புத பவுல் ராணி, வழக்கறிஞர் மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தாய்மை, மேன்மை, பொறுமை, மென்மை என பல தன்மைகளைக் கொண்ட பெண்மையின் உரிமைகளையும் கடமைகளையும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் விரிவுரையாளர் ஜெசீமா சித்தீக்கியா விளக்கினார். இறைச் சட்டமே அனைத்திற்கும் தீர்வு என்ற தலைப்பில் இஸ்லாமியா பள்ளி ஆசிரியை அஸ்மாபீ தய்யிபா உரையாற்றினார். இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் தேவை குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

முன்னதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் ஃபர்சானா தலைமுறை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் இஸ்லாமிய சட்டங்களே அனைத்திற்கும் தீர்வு, அதனை பெண்களாகிய நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என அனைத்து பெண்களும் ஒரு சேர உறுதிமொழி மேற்கொண்டனர். சலீனா அனைவரையும் வரவேற்க நிகழ்ச்சி நெறியாளர் ஷக்கீலா நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...