நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் - முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்.எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு சென்று பார்ப்பது இன்னமும் தொடர்கின்றது என குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓ.பி்.எஸ் டிவிட்டர் தகவல் தவறாக பதிவிடப்பட்டது எனவும் தற்போது அந்த பதிவு சரி செய்யப்பட்டதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் தங்கள் அணி உறுதியாக இருப்பதாகவும், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கும் எனவும் இரு அணிகள் தரப்பிலும் ஆரோக்கியமான வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது எனவும் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், வலிமையான நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் என தெரிவித்தார். ரஜினி அரசியல் வருகை என்பது வரவேற்க வேண்டியது என கூறியவர் ரஜினி நல்ல மனிதர் எனவும் தெரிவித்தார். அதிமுகவை பா.ஜ.க நேரடியாகவே இயக்கும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும், எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என்றார். 11ம் வகுப்புக்கு பொதுதேர்வு என்பது வரவேற்கதக்க நடவடிக்கை என பாராட்டியவர் அமைச்சர் செங்கோட்டையன் செய்படுத்திய கிரேடு முறை திட்டம் அருமையான திட்டம் எனவும் கடந்த 3 மாதங்களாக பள்ளிகல்வி துறை சிறப்பாக செயல்படுகின்றது எனவும் பாராட்டினார். தவறை சுட்டிகாட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிகாட்டியும் விமரசிக்க வேண்டிய நேரத்தில் விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்றவர் பள்ளிகளில் அம்மா கிட்ஸ் உபகரணங்களை உடனடியாக வழங்கப்பட்டால் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இணையாக மாநில பாடதிட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...