தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகளால் ஈரோடு ரயில்நிலையத்தில் இரவு நேர திடீர் பயணச்சீட்டு பரிசோதனை

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியில் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஈரோடு ரயில்நிலையத்தில் நேற்று (19,05,2017) இரவு 8 மணி முதல் இன்று (20,05,2017) அதிகாலை 4 மணி வரை திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.  சேலம் தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் எம். ராஜேஸ்வரன் அவர்கள் தலைமையிலான 16 பேர் கொண்ட வணிகவியல் குழு மற்றும்சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை துணை ஆணையர் சிவதாஸ் தலைமையிலான 15 ரயில்வே பாதுகாப்புப் படையினர் குழு  மேற்கொண்ட இந்த திடீர் சோதனையில் 61 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 21,050 ருபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இந்த இரவு நேர பயணச்சீட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு செயல்படுத்தியமைக்கு சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா மற்றும்  சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் அவர்களையும் வணிகவியல் மற்றும் ரயில்வே பாதுகாப்புபடையினரையும் பாராட்டியதுடன், இத்தகு சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.  ரயில் பயணிகளையும் தகுந்தத பயணச்சீட்டு பெற்று பயணம் செய்து ரயில்வேக்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...