நகை பட்டறை ஊழியரை கத்தியால் குத்தி ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளை: கோவையில் துணிகரம்


கோவை கெம்பட்டி காலணி பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் வீதியில் தங்க நகைபட்டறை நடத்தி வருபவர் குணசேகரன். இந்த நகை பட்டறையில் நாகராஜ் மற்றும் சரவணன் ஆகிய இருவர் நேற்று இரவு பணியில் இருந்தனர். இன்று அதிகாலை சரவணக்குமார் கடைக்கு சென்ற நேரத்தில் நகை பட்டறைக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய்பொடி தூவினர். மேலும், அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த நாகராஜ் அலறித்துடித்தார். அப்போது, நகை பட்டறையில் இருந்த 1.5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

கடைக்கு சென்றுவிட்டு நகை பட்டறைக்கு திரும்பிய சரவணகுமார் இரத்த வெள்ளத்தில் இருந்த நாகராஜை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், நகை கொள்ளை போன சம்பவத்தை அறிந்து, பெரிய கடை வீதி போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...