விரைவில் சட்டமன்றம் கூட்டப்படும் என உதகையில் மலர் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையில் 121 வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய அவர்,மலைகளின் அரசியான நீலகிரிக்கு யாரும் மகுடம் சூட்டாத நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் மகுடம் சூட்டியதாகவும் பல்வேறு நல திட்டங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தை வளர்ச்சியடைய செய்தவர் ஜெயலலிதா எனவும் புகழாரம் சூட்டினார்.மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது கொய்மலர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும்,ரோஜா தோட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் அவரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார்.

தொடர்ந்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனன் மற்றும் கோபாலகிருஷ்னன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று உதகை பேருந்து நிலையத்தை புதுப்பித்து நவீனப்படுத்த உடனடியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை வழங்க இந்த அரசு தயாராக இருப்பதாக கூறிய முதலமைச்சர்,முன்னாள் முதல்வர் பாணியில் பிறரை அழிக்க நினைத்து அழிந்த பக்தன் என்ற தலைப்பில் குட்டிக்கதை கூறியும் தன்னை யாரும் வளர்த்து விடவில்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே தான் வளர்ந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது உதகை தாவரவியல் பூங்காவை சீரமைக்க 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணிகள் விரைவில் துவங்கும் எனவும் கூறினார்.இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியில் 2 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் விரைவில் தமிழக சட்டமன்றம் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...